கலைஞர் கைவினைத் திட்டம்
தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருக்கின்ற கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் மேம்படுத்தவும் கடன் உதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை இத்திட்டதை செயல்படுத்துகிறது.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.
கைவினைஞர்களுக்கு 5% வட்டியுடன் ரூபாய் 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
கலைஞர் கைவினைத் திட்டமானது தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை கைவினைக் கலைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யாரையும் விலக்காமல், சமூகப் பாகுபாடு பார்க்காமல் “ஆர்வமான கைவினைஞர்கள், விரும்பிய தொழிலைச் செய்யலாம்” என்கின்ற அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Kalaignar Kaivinai Thittam (KKT scheme) |
No comments
Post a Comment